Thursday, January 29, 2009

கம்பஸ்சின் கலைச்சொற்கள்!


எனது பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப்படும் சில கலைச்சொற்களை (?) இங்கே தொகுத்துத் தருகிறேன். இவை பொதுவாக இலங்கைப் பல்கலைக்கழகங்களில் பயன்படுத்தப்படுபவை. இவை எப்போது எங்கே தோற்றம் பெற்றன என யாருக்கும் தெரியாது. இவற்றில் பல பல்கலைக்கழகங்களிற்கு வெளியிலும் பயன்படுத்தப்பட்டாலும் பல்கலைக்கழகத்தில் பயன்படுத்தப் படும்போதுதான் இவற்றுக்கு ஒரு தனிச்சுவை. இவற்றுடன் எனது பல்கலைக்கழகத்தின் படங்கள் சிலவற்றையும் இணைத்துள்ளேன். இனிச் சொற்கள்……



  • குப்பி

இது பல்கலைக்கழகத்தில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு சொல். இதன் பொருள் ஒரு மாணவன் இன்னொரு மாணவனிற்கு கற்பித்தல் என்பதாகும். அவ்வாறு கற்பிப்பவன் சக பாடியாகவோ, சீனியராகவோ, இல்லை யூனியராகவோ ( ஒரு வருடம் மட்டை அடித்தால் வேறு வழி? ) இருக்கலாம். பரீட்சைக் காலங்களில் குப்பிக்காக கொப்பியும் கையுமாக ஒரு கூட்டமே அலையும். ஆனால் சில சமயம் குப்பி எடுப்பவனை விட குப்பி வாங்குபவன் அதிக மார்க்ஸ் எடுத்துவிடுவான்.


  • குத்தல

சராசரி அளவு என சான்றோர்களால் நிர்ணயிக்கப்பட்ட அளவிற்கு அதிகமாகப் படித்தல் குத்தல் எனப்படும். இவ்வாறு குத்துபவர்கள் எந்நேரமும் Library இல் புத்தகமும் கையுமாக இருப்பார்கள். நாங்களெல்லாம் குப்பிக்காக இவர்களையே தேர்ந்தெடுப்போம். சும்மா சொல்லக்கூடாது, PHD முடித்த எமது prof மாரை விட நன்றாகவே சொல்லித்தருவார்கள். ஆனா என்னதான் குத்தினாலும் குப்பியில படிக்கிறவன்தான் எடுப்பான் A+.


  • கையில

பரீட்சையில் fail விடுவதை இப்படி நாகரிகமாகக் கூறுவார்கள். பரீட்சை முடிந்தபின் பரீட்சை மண்டபத்திற்கு வெளியே “ மச்சான் கையிலதான்டா ” என்ற வாசகத்தைப் பரவலாகக் கேட்கலாம். ஆனால் அதைச் சொல்பவன்தான் A+ எடுத்துவிடுவான். நாங்களெல்லாம் “ பரவாயில்லை ” ரகம். எங்கட Result உம் பரவாயில்லை தான். ஒருமுறை யோசித்தேன், நானும் “ மச்சான் கையிலதான்டா ” எனக் கூறுவோம் என்று. ஆனால் எப்போதும் உண்மையாகும் எனது “ பரவாயில்லை ” யைப்போல “ மச்சான் கையிலதான்டா ” வும் உண்மையாகிவிட்டால் என்று பேசாமல் இருந்துவிட்டேன். போதுமென்ற மனமே …….


  • வாளி

பேசும் போது கொஞ்சம் ஓவராக வழிபவர்களும், தாமே வலியச்சென்று தேவையற்ற விடயங்களைப் பேசுபவர்களும் ( குறிப்பாகப் பெண்களிடம் ) வாளி எனப்படுவர். பொதுவாக இப்படி இருப்பவர்களை நாம் என்னதான் நக்கல் அடித்தாலும் அதைக் கணக்கிலேயே எடுக்கமாட்டார்கள்.


  • நோண்டி

அடுத்தவர் முன் அவமானப்படுதல் என நேரடிப் பொருள் எடுத்தாலும் உண்மையில் இதற்கு நேரடி அர்த்தமாக அதை எடுக்க முடியாது. இதை எப்படி வரைவிலக்கணப்படுத்துவது என எனக்குத் தெரியவில்லை. ஆனால் அவமானம் ஏற்படுத்தும் பாதிப்பை விட சற்றுக் குறைந்த பாதிப்பை மனதில் ஏற்படுத்தும்.


  • வாசிப்பு

வஞ்சப் புகழ்ச்சியின் நாகரிக வடிவம்தான் இந்த வாசிப்பு. இதைச் செய்வது ஒரு தனிக்கலை. ஒருவனின் காதல், கல்வி போன்றவையே இதில் முக்கிய இடம்பெறும். ஒருவனுக்கு வாசிக்கும்போது அவனைப்பற்றித் தெரியாதவர்கட்கு ஒன்றுமே புரியாது. ஆனால் தெரிந்தவர்களால் சிரிக்காமல் இருக்க முடியாது.


4 comments:

ilangan on January 31, 2009 at 11:56 AM said...

பரீட்சையில் தோல்வியடைந்தால் புட்டுக்கிச்சு என்றொரு புதிய சொல் அறிமுகமாயிருக்கு தெரியாதா? இந்தியன் கொப்பி தானுங்கோ.
http://www.ilangan.blogspot.com

Anonymous said...

ஹா...ஹா..

Sinthu on June 24, 2009 at 1:12 PM said...

அடடா குத்தலும் வாசிப்பும் தெரியாமல் போட்டிதே..

மா.குருபரன் on October 19, 2009 at 8:41 PM said...

நல்ல பதிவு...

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy