Monday, September 28, 2009
கலைஞரிடமிருந்து நான் கற்றுக்கொண்டது…
பதிவு எழுதிப்பார்!
Friday, September 25, 2009
காதல், பணம், கடவுள், அழகு
Monday, September 21, 2009
உன்னைப்போல் ஒருவன்
Friday, September 18, 2009
பெட்டி தி(பி)றந்த கதை
நான் பதிவெழுத வந்த கதையை பனையூரான், சுபானு இருவருமே எழுதச்சொல்லிக் கேட்டு பத்து நாட்களுக்கு மேல் ஆகிவிட்டிருக்கும். இதற்குமேலும் தாமதிக்கக்கூடாது என்பதால் இன்றய மழைக்குளிருக்குக் குட்டித்தூக்கம் கூடப் போடாமல் இதை பதிவிடுகிறேன்.
அப்போது பல்கலையில் June term நடந்துகொண்டிருந்த காலம். விளையாடுவது எப்படி என நடந்துகொண்டிருந்த லெக்சரில் வரவைப் பதிந்துவிட்டு பின்வாசல் வழியாக லெக்சரிலிருந்து ‘எஸ்’ ஆகி மீன்தொட்டியின் சிங்களப்பதத்தால் செல்லமாக அழைக்கப்படும் கணினி ஆய்வுகூடத்தினுள் ஐக்கியமானேன். அங்கே எனக்கு முன்னரே ‘எஸ்’ ஆகியிருந்த நண்பன் ஒருவனினால் அறிமுகப்படுத்தப்பட்டதே லோஷன் அண்ணாவின் தளம். எதற்கும் இருக்கட்டும் என்று அதிலே இருந்த “Create a blog” இனைக் கிளிக்கி நானும் ஒன்றை உருவாக்கிக்கொண்டேன். அன்றுமுதல் லோஷன் அண்ணாவின் பதிவுகளையும், அவர் இணைப்புக்கொடுத்திருந்த ஏனய பதிவர்களின் பதிவுகளையும் படிக்கத் தொடங்கினேன்.
அதே June termஇன் இரண்டாவது பாதி. ஏதாவது ஒரு Project சமர்ப்பிக்க வேண்டிய காலம். டிபார்ட்மென்டில் கூட இருந்த ஒரேயொரு தமிழ் நண்பனும் நானும் வெவ்வேறு குழுக்களாக்கப்பட்டுவிட தமிழ் பேசக் கூட யாருமே இல்லாத நிலையில்தான் நானும் பதிவெழுதினால் என்ன என்ற விபரீத ஆசை எனக்குள்ளும் துளிர்விட்டது.
அப்போது எனக்கு தமிழ்மணம், தமிழிஷ், ஏன் திரட்டிகளில் பதிவுகள் திரட்டப்பட்டுத்தான் பலரையும் சென்றடைகின்றது என்பதுகூடத் தெரியாது. பின்னர் ஆங்காங்கே பதிவுகளில் இருக்கும் இணைப்புக்களை சொடுக்கி அவற்றைப்பற்றி அறிந்து, இணைப்பது எப்படி எனத் தெரியாது விழித்து, என அவை எல்லாம் சொந்தக்கதை, சோகக்கதை.
பதிவுகள் எழுதத் தொடங்கும்போதே facebookஇன் புண்ணியத்தில் தமிழ்99 தட்டச்சும், யுனிக்கோட் பற்றிய அறிவும் இருந்ததால் அதில் பிரச்சினை ஏற்படவில்லை.
பதிவுலகம் எனக்குக் கொடுத்தவை ஏராளம். பல முகம்தெரியாத பதிவர்களுடன் கூட பலகாலம் பழகிய ஒரு உணர்வை இது எனக்குத் தந்திருக்கிறது. கூடவே இதுவரை நான் யார்கூறியும் கேட்டறியாத கெட்ட வார்த்தைகள் அடங்கிய அனானிப் பின்னூட்டங்களையும்தான். அதிகம் தொழில்நுட்பப் பதிவுகள் இடத் தொடங்கியமைக்கு அவையும் ஒரு காரணம்.
பதிவுகள் எழுதத் தொடங்கிய பின்னர்தான் பல இடங்களில் எனக்கும் ஒரு அங்கீகாரம் கிடைப்பதாய் உணர்ந்திருக்கிறேன். இன்று பதிவிடல் தொடர்பாக என்னிடமும் சிலர் ஆலோசனை கேட்கும்போது ஒருவகைப் பெருமையாகவே இருக்கும்.
எழுத எழுத எழுதிக்கொண்டே இருக்கலாம். ஆனால் சுயபுராணம் பாடும்போதும் கொஞ்சம் அடக்கியே பாடவேண்டும். அதனால் இத்தோடு முடிக்கிறேன்.
ஏற்கனவே இதைப் பலரும் எழுதி முடித்துவிட்டதால் இனி யாரையும் அழைக்கப் போவதில்லை. மன்னிக்க.
Monday, September 14, 2009
ஏமாறுவோர் இருக்கும்வரை… (உண்மைச் சம்பவம்)
Friday, September 11, 2009
இன்னுமொரு சனிப்பெயற்சி
- பதிவுலகின் எனது முதலாவது நண்பி சிந்துவை யாழில் சந்திக்கும் சந்தர்ப்பம் கிடைத்தது. பதிவுலகால் இடம்பெற்ற எனது முதலாவது சந்திப்பு இது.
- இந்த இடைப்பட்ட காலத்தில் யாழ்தேவி திரட்டி என்னை நட்சத்திரமாக அறிவித்திருந்தது. அந்த வாய்ப்பை என்னால் பயன்படுத்திக்கொள்ளவே முடியாமல் போய்விட்டது.
- இந்த இடைப்பட்ட காலத்தில்தான் இலங்கையின் முதலாவது பதிவர் சந்திப்பு இடம்பெற்றது. முதலில் வரவேண்டும் என்று முடிவு செய்திருந்தாலும் பின் யாழ் – கொழும்பு பயண இழுபறிகள் முடிவை மாற்றிவிட்டன.
- சந்ரு அண்ணா எனக்கு அடுத்த அன்புப்பரிசையும் கொடுத்துவிட்டார். இன்னுமொரு விருது. Scrumptious Blog Award . அவருக்கு எனது நன்றிகள். அதை வேறு நாற்பது பேருக்குக் கொடுக்க வேண்டுமாம். ஸபா..
- சக பதிவர்கள் பனையூரான், சுபானு இருவருமே என்னை நான் பதிவெழுதத் தொடங்கிய கதையை எழுதச்சொல்லி அழைத்துள்ளனர். கரும்பு தின்னக் கூலியா? தோ.. எழுதத் தொடங்கிட்டேனே!
- கார்த்தி அண்ணா என்மேல் கொண்ட அளவுகடந்த பாசத்தால் என்னை பிரபல பதிவராக்கிந்தோடு மட்டும் நின்றுவிடாது எனது சில தணிக்கை செய்யப்பட்ட தகவல்களையும் வலையில் பரப்பிவிட்டதும் இதே காலத்தில்தான். அது இங்கே!
- ஏமாறுவோர் இருக்கும்வரை ஏமாற்றுவோரும் இருக்கத்தான் செய்வார்கள். நானும் ஏமாந்து மற்ற சிலரையும் ஏமாறச்செய்த எனது மனதை உறுத்தும் ஒரு சம்பவம் அடுத்த பதிவில்.