Tuesday, November 24, 2009

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு – அறிவிப்பும் நிகழ்ச்சி நிரலும்



இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு




வணக்கம் நண்பர்களே,

இலங்கையில் பதிவர்சந்திப்பை இரண்டாவது தடவையாகவும் நடாத்தவேண்டும் என்கின்ற எம் அனைவரதும் ஆசை நிறைவேறப்போகின்றது.

இடம் : தேசிய கலை இலக்கியப் பேரவை, வெள்ளவத்தை (ரொக்சி திரையரங்கு முன்னால்)

காலம் : மார்கழி பதின்மூன்று, மாலை இரண்டு மணி, ஞாயிற்றுக் கிழமை ( 13-12-2009 )

நிகழ்ச்சி நிரல்

அறிமுகவுரை
புதிய பதிவர்கள் அறிமுகம்
கலந்துரையாடல் ஒன்று : பயனுறப் பதிவெழுதல்
கலந்துரையாடல் இரண்டு : பின்னூட்டங்கள்
சிற்றுண்டியும் சில பாடல்களும்
கலந்துரையாடல் மூன்று : இலங்கைத் தமிழ்ப் பதிவர் குழுமத்தை எவ்வாறு        சிறப்பாகப் பயன்படுத்துவது?
கலந்துரையாடல் நான்கு : பெண்களும் பதிவுலகமும்
பதிவர்களுக்கிடையான குழுப் போட்டி
உங்களுக்குள் உரையாடுங்கள்

பதிவர்கள் தங்கள் வருகையை இங்கே பதிலிடுவதன் மூலமோ, தெரிந்தால் அமைப்புக்குழுவினரில் ஒருவருக்கு தொலைபேசியோ, நேரிலோ அல்லது ஏதோ ஒரு வழியிலோ தெரிவித்தால் நலம்பெறும்.

எம்மால் எமக்காக நடாத்தப்படும் இந்தச் சந்திப்பை சிறப்பாக நடாத்த பதிவர்கள் குறைந்தது நூறு ரூபாய்களாவது கொடுத்து சிறப்பாக நடாத்துங்கள்.

இந்தப் பதிவர்சந்திப்பு நேரடி ஒளிபரப்புச் செய்யப்படும். அதன் சுட்டி http://livestream.com/srilankatamilbloggers

இம்முறை அமைப்புக் குழுவினர்
கனககோபி, சம்யுக்தா, மன்னார் அமுதன், மதுவர்மன், மதுவதனன், சுபாங்கன், மு மயூரன்

இங்ஙனம்
ஏற்பாட்டுக் குழுவினர்.

39 comments:

Unknown on November 24, 2009 at 4:23 PM said...

இதுபற்றி வலைத்தளங்களில் முதலாக பதிவிட்டமைக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....

பதிவர்களை எல்லாம் திரும்பவும் சந்திக்கப்போவது மகிழ்ச்சியே...

இது எம் எல்லோரினதும் நிகழ்வு.
பதிவர்களுக்குரிய நிகழ்வு.
இதை வெற்றிபெறச் செய்வது எம் எல்லோரினதும் பொறுப்பு.

சென்ற சந்திப்பை வெற்றியானதாக மாற்றியது போல இதையும் வெற்றிபெறச் செய்வோம்.

யோ வொய்ஸ் (யோகா) on November 24, 2009 at 4:52 PM said...

கோபியை வழி மொழிகிறேன்.

கலையரசன் on November 24, 2009 at 6:13 PM said...

வாழ்த்துக்கள் சுபா... உங்களுக்கும் மற்றும் இனை பதிவர்கள் அனைவருக்கும்!!

balavasakan on November 24, 2009 at 7:08 PM said...

இரண்டாவது பதிவர்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...நணபர்களே.!

ஆதிரை on November 24, 2009 at 9:58 PM said...

உள்ளேன் தம்பி...

Admin on November 24, 2009 at 9:58 PM said...

சந்திப்போம். சிந்திப்போம்..

Admin on November 24, 2009 at 10:03 PM said...

//கனககோபி said...
இதுபற்றி வலைத்தளங்களில் முதலாக பதிவிட்டமைக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....

பதிவர்களை எல்லாம் திரும்பவும் சந்திக்கப்போவது மகிழ்ச்சியே...

இது எம் எல்லோரினதும் நிகழ்வு.
பதிவர்களுக்குரிய நிகழ்வு.
இதை வெற்றிபெறச் செய்வது எம் எல்லோரினதும் பொறுப்பு.

சென்ற சந்திப்பை வெற்றியானதாக மாற்றியது போல இதையும் வெற்றிபெறச் செய்வோம்.//


என்னய்யா நீங்கள் நாங்கள் செய்கிறோம் சிறப்பாய் தானே செய்வோம். இளம் சிங்கங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறது சும்மாவா?

Neelaavanan- நீலாவணன் on November 24, 2009 at 10:50 PM said...

நானும் என் வருகையை உறுதிசெய்கிறேன்

எழில்வேந்தன்

தமிழன்-கறுப்பி... on November 24, 2009 at 10:58 PM said...

வாழ்த்துக்கள்...

தமிழன்-கறுப்பி... on November 24, 2009 at 10:59 PM said...

பதிவின் தலைப்பு அரசியலுக்கு உட்படுத்தப்படலாம்.

maruthamooran on November 25, 2009 at 8:37 AM said...

உள்ளேன் ஐயா (மற்றும் அண்ணன்கள், அக்கா)

வந்தியத்தேவன் on November 25, 2009 at 10:39 AM said...

கலக்குவோம் என் வருகையையும் பதிவு செய்துகொள்கின்றேன்

Unknown on November 25, 2009 at 12:04 PM said...

இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 சிறப்படைய வாழ்த்துக்கள்.

Subankan on November 25, 2009 at 6:33 PM said...

// கனககோபி said...
இதுபற்றி வலைத்தளங்களில் முதலாக பதிவிட்டமைக்கு நன்றி சுபாங்கன் அண்ணா....

பதிவர்களை எல்லாம் திரும்பவும் சந்திக்கப்போவது மகிழ்ச்சியே...

இது எம் எல்லோரினதும் நிகழ்வு.
பதிவர்களுக்குரிய நிகழ்வு.
இதை வெற்றிபெறச் செய்வது எம் எல்லோரினதும் பொறுப்பு.

சென்ற சந்திப்பை வெற்றியானதாக மாற்றியது போல இதையும் வெற்றிபெறச் செய்வோம்//

நிச்சயமாக கோபி

Subankan on November 25, 2009 at 6:34 PM said...

// யோ வொய்ஸ் (யோகா) said...
கோபியை வழி மொழிகிறேன்//

சரி, ஏகமனதாக ஏற்றுக்கொள்ளப்படுகிறது

Subankan on November 25, 2009 at 6:36 PM said...

// கலையரசன் said...
வாழ்த்துக்கள் சுபா... உங்களுக்கும் மற்றும் இனை பதிவர்கள் அனைவருக்கும்!//

நன்றி கலை!

Subankan on November 25, 2009 at 6:38 PM said...

// Balavasakan said...
இரண்டாவது பதிவர்கள் சந்திப்பு மிகச்சிறப்பாக நடைபெற வாழ்த்துக்கள்...நணபர்களே.//

நன்றி பாலா

Subankan on November 25, 2009 at 6:39 PM said...

//ஆதிரை said...
உள்ளேன் தம்பி//

உங்கள் வரவு பதியப்பட்டது அண்ணா

Subankan on November 25, 2009 at 6:41 PM said...

// சந்ரு said...
சந்திப்போம். சிந்திப்போம்//

சிந்திக்கிறதா?

Subankan on November 25, 2009 at 6:42 PM said...

//சந்ரு said...



என்னய்யா நீங்கள் நாங்கள் செய்கிறோம் சிறப்பாய் தானே செய்வோம். இளம் சிங்கங்கள் ஒன்று சேர்ந்திருக்கிறது சும்மாவா?//

யாரைச் சிங்கம் என்கிறீர்கள்? நான் வெறும் புள்ளப்பூச்சிதான் :P

Subankan on November 25, 2009 at 6:43 PM said...

// Neelaavanan- நீலாவணன் said...
நானும் என் வருகையை உறுதிசெய்கிறேன்

எழில்வேந்தன்//

நன்றி

Subankan on November 25, 2009 at 6:46 PM said...

// தமிழன்-கறுப்பி... said...
வாழ்த்துக்கள்//

நன்றி

Subankan on November 25, 2009 at 6:47 PM said...

//மருதமூரான். said...
உள்ளேன் ஐயா (மற்றும் அண்ணன்கள், அக்கா)//

நான் தம்பியாக்கும்

நன்றி

Subankan on November 25, 2009 at 6:49 PM said...

// ஈழவன் said...
இலங்கைத் தமிழ்ப் பதிவர் சந்திப்பு - 2 சிறப்படைய வாழ்த்துக்கள்.//

நன்றி

Subankan on November 25, 2009 at 6:50 PM said...

// வந்தியத்தேவன் said...
கலக்குவோம் என் வருகையையும் பதிவு செய்துகொள்கின்றேன்//

ஆகட்டும்

Subankan on November 25, 2009 at 6:51 PM said...

//தமிழன்-கறுப்பி... said...
பதிவின் தலைப்பு அரசியலுக்கு உட்படுத்தப்படலாம்//

இவ்வாறு குறிப்பிடுவதில் தவறில்லை என நினைக்கின்றேன்.

ARV Loshan on November 25, 2009 at 11:52 PM said...

வாழ்த்துக்கள்.. உங்கள் உழைப்பில் எம் பங்களிப்பும் இருக்கும்..
வருகை நிச்சயம்.. குழும அறிவித்தலும் மடல் மூலம் கிடைத்தது..

ஏற்பாட்டுக் குழு தோழருக்கு வாழ்த்துக்கள்.. கலக்குவோம் இம்முறையும்.

Subankan on November 26, 2009 at 1:57 PM said...

//LOSHAN said...
வாழ்த்துக்கள்.. உங்கள் உழைப்பில் எம் பங்களிப்பும் இருக்கும்..
வருகை நிச்சயம்.. குழும அறிவித்தலும் மடல் மூலம் கிடைத்தது..

ஏற்பாட்டுக் குழு தோழருக்கு வாழ்த்துக்கள்.. கலக்குவோம் இம்முறையும்//

நன்றி அண்ணா

விமல் on November 27, 2009 at 10:01 AM said...

வண்ணத் தமிழ் வணக்கங்கள் கோடி..
இனிதே நடைபெற வாழ்த்துக்கள் ..

Subankan on November 27, 2009 at 6:32 PM said...

//விமல் said...
வண்ணத் தமிழ் வணக்கங்கள் கோடி..
இனிதே நடைபெற வாழ்த்துக்கள்//

நன்றி விமல்

ilangan on November 28, 2009 at 10:46 AM said...

வாறோம் வாறோம். யாழிலிருந்து கொழும்பு நோக்கி சந்திப்புக்காக..

Subankan on November 28, 2009 at 12:54 PM said...

//ilangan said...
வாறோம் வாறோம். யாழிலிருந்து கொழும்பு நோக்கி சந்திப்புக்காக.//

வாருங்கள் இலங்கன், சந்திப்போம்

Anonymous said...

read and spread this page thanks
http://www.psminaiyam.com/

வேந்தன் on November 29, 2009 at 7:06 AM said...

சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.
வெளி நாட்டில் இருப்பதால் நேரடி ஒளிபரப்பை எதிர் பார்க்கின்றேன்.

Subankan on November 29, 2009 at 10:27 AM said...

//வேந்தன் said...
சந்திப்பு வெற்றிகரமாக நடைபெற வாழ்த்துக்கள்.
வெளி நாட்டில் இருப்பதால் நேரடி ஒளிபரப்பை எதிர் பார்க்கின்றேன்//

நன்றி நண்பா, நேரடி ஒளிபரப்பில் இணைந்திருங்கள்

விபு on November 29, 2009 at 11:02 AM said...

சந்தியுங்க. சந்தித்த பின் அதைப் பற்றியும் எழுதுங்க..

Sinthu on November 29, 2009 at 6:16 PM said...

மறுபடியுமா?

Subankan on November 29, 2009 at 6:19 PM said...

//விபு said...
சந்தியுங்க. சந்தித்த பின் அதைப் பற்றியும் எழுதுங்க//

நிச்சயமாக விபு

Subankan on November 29, 2009 at 6:20 PM said...

// Sinthu said...
மறுபடியுமா?
//

இதற்கு எதற்கு இவ்வளவு ஆச்சரியம்?

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy