Monday, January 25, 2010

அ(ந)ரசியல்

18 comments

‘உங்கள் மனைவியிடமிருந்து அழைப்பு வந்திருக்கிறது’
பிரதீப் முன்னாலிருந்த கணிணித்திரை அவன் கவனத்தைக் கலைத்தது. ‘இப்போது வேலையாக இருக்கிறேன், பிறகு பேசச்சொல்’ என்றுவிட்டு தனக்கு முன்னாலிருந்த ட்ரான்ஸ்பேரன்ட் தொடுதிரையில் தோன்றிய தகவல்களுக்கேற்ப கணினிக்குக் கட்டளைகளைப் பிறப்பித்துக்கொண்டிருந்தான்.
‘இல்லை, உடனடியாகப் பேசவேண்டுமாம், சிறிது  கோபமாக இருக்கிறார்கள்’
மீண்டும் கூறிய கணினியிடம் ‘சரி தொடர்பைக் கொடு’ என்றவாறே அதன்பக்கம் திரும்பினான்.

பிரதீப், கொழும்பிலுள்ள வர்த்தகமையக் கட்ட்டத்தின் 110ஆவது மாடியில் இavatar1ருந்த பிரதீப் அண் கோ வின் சுழல் நாற்காலியில் நாள்முழுவதும் சுழன்றுகொண்டிருக்கும் ஒருவன். அவனைச்சுற்றியிருந்த தொடுதிரைகள் அவனது வியாபாரத்தில் உலகத்தில் ஏற்படும் மாற்றங்களை கணப்பொழுதுக்குள் காட்டிக்கொண்டிருக்க, அவளது எண்ண ஓட்டங்களையே கட்டளைகளாக ஏற்று சில நிமிடங்களுக்குள் லட்சங்களில் சம்பாதித்துக்கொடுத்துக்கொண்டிருந்தது அவனது கணினி.

பிரதீப்பின் முன்னாலிருந்த கணினித்திரையில் தோன்றினாள் ப்ருந்தா.
‘ஹேய் ப்ருந்த், யூ லுக் சோ பியூட்டிபுல்’ என்றவனிடம்
‘பின்ன, வாரக்கணக்கில பாக்காம இருந்தா அப்படித்தான். இண்டைக்காவது வீட்டுக்கு வந்துடுவேல்ல?’ என்றாள். ‘
‘சாரிடா, உனக்குத்தான் தெரியுமில்ல, ஒன் அவர் நான் இங்க இல்லேன்னா எவ்வளவு லாஸ்ட் ஆயிடும் தெரியுமா உனக்கு?’ என்று பரபரத்தான் பிரதீப்.
அவனைப்பொறுத்தவரை பணம்தான் எல்லாமே. பணம் பண்ணும் ஒரு இயந்திரமாகவே நடமாடிக்கொண்டிருந்தான் அவன். மாத்திரைகளும், உடலின் ஆங்காங்கே இணைக்கப்பட்டிருந்த இயந்திரங்களும் அவனுக்குத் தூக்கத்தை முற்றிலுமாக மறக்கச்செய்திருந்தன. உலகெங்கும் பரந்திருந்த அவனது நிறுவனத்தின் நூற்றுக்கணக்கான ஊழியர்களையும், ஆயிரக்கணக்கான இயந்த்திரங்களையும் ஒற்றை மேசையில் இருந்தவாறே வழிநடாத்திக்கொண்டிருப்பதற்கு அவனுக்கு நாள் ஒன்றுக்கு 24 மணித்தியாலங்கள் போதாதுதான்.

‘இன்னும் இரண்டு மணி நேரத்துல உனக்கு பிறந்தநாள் தெரியுமில்ல?, அதுக்குக்கூடவா வீட்டுக்கு வரக்கூடாது?’ என்றவளைப்பார்த்துப் புன்னகைத்துவிட்டு,
‘அப்படியா?, சரி சரி அதுக்கு முன்னாலேயே வீட்டில் இருப்பேன்’ என்றவாறே அழைப்பைத் துண்டித்தான்.

கொழும்பிலிருந்து யாழ்ப்பாணத்திலிருக்கும் வீட்டுக்குப் போவதற்கே இருபத்தெட்டு நிமிடங்கள் ஆகிவிடும். எப்படியும் இரண்டுமணி நேரம் வீணாகப்போகிறது. வேலைகளை விரைவாக முடித்தாகவேண்டும் என்று அவன் எண்ணிமுடிக்கும் முன்னரே அவனது வேலைகளை கணினி அவன்முன் பட்டியலிட்டிருந்தது.

எல்லாவற்றையும் சரிபார்த்துவிட்டு, அதிவேக லிப்டில் சில நொடிகளுக்குள் இறங்கிவந்து சரியாக 11.30க்கு காரில் ஏறினான். போகவேண்டிய இடத்தை அதிலிருந்த கம்யூட்டருக்குத் தெரியப்படுத்திவிட்டு கண்ணை மூடினான். தரையிலிருந்து சில அடி உயரத்தில் மிதந்தவாறே கணினியால் செலுத்தப்பட சீறிக்கொண்டு புறப்பட்ட கார் சில நிமிடங்களிலேயே நிறுத்தப்படது. விழித்துக்கொண்டு வினவிய அவனுக்கு காரிலிருந்த கம்யூட்டர்
‘மன்னிக்கவும், எல்லாப்பாதைகளும் தேர்தல் பிரச்சாரக் கூட்டங்களினால் மூடப்பட்டுவிட்டன. சரியாக ஐம்பத்தெட்டு நிமிடத்தின் பின்னரே இங்கிருந்து எம்மால் நகரமுடியும்’ என்று கூறி ஓய்ந்தது.

காரில் இருந்தபடியே மெதுவாக எட்டிப்பார்த்தான் பிரதீப். அங்கேயிருந்த மேடையில் 2124ம் ஆண்டுக்கான இலங்கையின் ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் ஒருவர் சிறுபான்மை மக்களுக்கு நியாயமான, நீதியான அரசியல் தீர்வு வழங்கப்படும் என்று முழங்கிக்கொண்டிருந்தார்.

Wednesday, January 13, 2010

பதிவுகளில் கும்மி அடிப்பது எப்படி?

81 comments






405 பின்னூட்டங்கள் இட்டு என்னைக் கதறக்கதறக் கும்மி எடுத்ததன் அறுபத்தெட்டாவது நாள் நிறைவாக இந்தப் பதிவு வெளியாகிறது. அன்று கும்மியடித்த பலரும் கும்முவதில் கைதேர்ந்துவிட்ட்ட நிலையில், கும்முவதற்கு புதியவர்களையும் தயார்படுத்துவதே இந்தப்பதிவின் நோக்கம்.

கும்மியின் நோக்கம் 


வெட்டியாக இருக்காமல் பொழுதுபோக்கல்

கும்மிக்குத் தேவையானவை



  • வெட்டியாக இருக்கும் இரண்டு அல்லது அதற்கு மேற்பட்டோர்
  • மொக்கைப்பதிவு
  • கொலைவெறி
  • கணினி
  • இணைய இணைப்பு


கும்மி அடிக்கும் முறை


முதலில் பதிவைப் படிக்காமல் மீ த பஸ்ட்டு, செகண்டு எனப் பின்னூட்டிவிடவேண்டும். பின்பு பதிவைப் படித்துவிட்டு, அது கும்முவதற்கு ஏற்றதாக இருந்தால் வேறு யாராவது அப்போது வெட்டியாக இருக்கிறார்களா என அறிய எனிபொடி ஹியர்? எனப் போட்டுவிடலாம். நிச்சயமாக ஒருவராவது வந்து யேஸ் ஐ ஆம் ஹியர் எனப் பின்னூட்டுவார். அவ்வளவுதான், உடனடியாக ஸ்ரார்ட் தி (சங்கு) மீசிக் என பின்னூட்டிவிட்டு கும்மியை ஆரம்பிக்கலாம்.

கும்மியின் ஆரம்பத்தில் சில பின்னூட்டங்கள் பதிவைச் சார்ந்து இருப்பது கட்டாயமாகிறது. தொடரும் பின்னூட்டங்களை வேண்டியவாறு வசதிப்படி இட்டுக்கொள்ளலாம். கும்மியடிப்போர் தமக்குள் பேசிக்கொள்ளும் களமாகவும் பின்னூட்டங்களைப் பயன்படுத்தலாம். இவ்வாறான கும்மிகளில் பின்னூட்டங்களின் எண்ணிக்கையே அவசியம். கும்மப்படும் விடயங்களல்ல.

கும்மும்போது கவனிக்கவேண்டியவை



  • பதிவின் சொந்தக்காரர் கும்மியடிப்போருக்கிடையில் சிண்டு முடியப் பார்க்கலாம். எனவே கும்முபவர்களுக்கிடையே புரிந்துணர்வு அவசியம்.
  • கும்மி முடியும்வரை வேலை ஏதும் வந்துவிடாது வெட்டியாக இருப்பது பயன்தரும்.
  • கும்மப்படும் பதிவர் மூச்சு விடாத அளவுக்கு கும்மியின் வேகம் இருப்பதை உறுதிசெய்துவிடவேண்டும்.
  • பின்னூட்டங்களின் எண்ணிக்கையை அறிந்துவைத்திருப்பது அவசியம். அப்போதுதான் முக்கிய இலக்கங்களான ஐந்நூறு, ஆயிரமாவது பின்னூட்டங்களை யார் இடுவது என்ற போட்டி கும்முவர்களுக்கிடையே ஏற்பட்டு, கும்மி ஆரோக்கியமானதாக இருக்கும்.


கும்மியின்போதான அவதானங்கள்



  • பதிவை வாசிக்க வருவோர் தலைதெறிக்க ஓட்டமெடுப்பர்
  • கும்மப்படும் பதிவர் கும்மியை நிறுத்துமாறு கதறுவார்
  • பின்னூட்ட எண்ணிக்கையைக் காட்டுவதில் பிளாக்கருக்கே குழப்பம் ஏற்படும்
  • கும்மியவர்களின் Keyboard இலுள்ள எழுத்துகள் அழிந்திருக்கும்
  • பதிவுக்கு மொக்கை அந்தஸ்து கிடைக்கும்
  • கும்மி அடிப்பவர்களின் பெயர்கள் திரட்டிகளில் பெரிய எழுத்தில் தெரியும்


கும்மியின் முடிவு


கும்மி அடிக்கப்பட்டவர் மயங்கிச் சரிந்தபிறகு, அல்லது சரணாகதி அடைந்தபிறகு கும்மியை நிறுத்திக்கொள்ளலாம்.

கேள்வி நேரம்


கும்மி தொடர்பான உங்கள் சந்தேகங்களை பின்னூட்டங்களில் கேட்கலாம். வெட்டியாக இருக்கும்போது விடையளிக்கப்படும்.


  



Thursday, January 7, 2010

தமிழ்மண விருதும் பதிவர்களும்

30 comments
தமிழ்மண விருதுகள் 2009 க்கான இரண்டாம் கட்ட வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடந்துகொண்டிருக்கிறது. நான் தெரிவுசெய்த இரு பதிவுகளுமே இரண்டாம் கட்டத்துக்கு வந்துவிட்டன. ஓட்டிட்ட அனைவருக்கும் நன்றிகள். இதில் போட்டியிடும் பதிவர்கள் போட்டியின் ஒவ்வொரு காலத்திலும் என்னேன்ன பாடியிருப்பார்கள் என்று ஒரு ஜாலி கற்பனை

அறிவிப்பு வரும்போது








தேவதையைக் கண்டேன், காதலில் விழுந்தேன்

போட்டிக்காகப் பதிவுகள் தெரியும்போது







பொதுவாக என்மனசு தங்கம், ஒரு போட்டியின்னு வந்துவிட்டா சிங்கம்

உடன் போட்டியிடும் பதிவுகளைப் பார்த்தபோது







வெற்றி வேண்டுமா போட்டுப்பாரடா எதிர்நீச்சல்

முதற்கட்ட முடிவுகள் வெளியிடப்படும்போது

வென்றுவிட்டால்




பத்துக்குள்ளே நம்பர் ஒண்டு சொல்லு

வெற்றிபெறாவிட்டால்




போனால் போகட்டும் போடா

இரண்டம்கட்டத்துக்கு ஓட்டுக்கேட்கும்போது



ஆண்டவன பாக்கணும், ஓட்டு ஒண்டு கேக்கணும்

முடிவுக்காக்க் காத்திருக்கும்போது




இதயமே..இதயமே.. உன் மெளனம் என்னைக்கொல்லுதே.. இதயமே..

இரண்டாம் கட்ட முடிவுகள் வெளியிடப்படும்போது

வென்றுவிட்டால்





வெற்றிமீது வெற்றி வந்து என்னைச் சேரும்

வெற்றிபெறாவிட்டால்




எங்கே செல்லும் இந்தப் பாதை


முடிவில் இது தொடர்பாக பதிவிடும்போது


வென்றுவிட்டால்




நன்றி சொல்ல உனக்கு வார்த்தை இல்லை எனக்கு


வெற்றிபெறாவிட்டால்



இதெல்லாம் டூப்பு


    

Friday, January 1, 2010

வருடத்தின் முதல் மொக்கை

33 comments

இன்னிக்கு நியூ இயர். இதுகூடத் தெரியாமலா இருக்கோம் என்பவர்களுக்காக பின்னூட்டப்பெட்டி திறந்துவிடப்பட்டுள்ளது. அதற்குமுதல் கடமையைச் செய்துவிடுகிறேன்.

ஐந்தறைப்பெட்டி வாசகர்கள் அனைவருக்கும்

WISH YOU A VERY HAPPY AND PROSPEROUS NEW YEAR




அப்படியே நம்ம சக பதிவர்கள், நண்பர்கள் எப்படியெல்லாம் வாழ்த்துச் சொல்லுவார்கள் என்று ஒரு சின்னக் கற்பனை


நேற்றய நீலநிற பூரணைச் சந்திரன், வருடத்தின் பதின்மூன்றாவது பூரணை தினம் என்ற கீர்த்தியைப் பரப்பிக்கொண்டு இருக்கையில் பிறந்துவிட்டது 2010. இவ்வாண்டிலே அனைவருக்கும் விர் விர் என்று விசா எடுத்து விமானத்தில் உயரப்பறப்பதுபோல, வாழ்க்கையின் உயரங்களை எட்டிவிட வாழ்த்துகள்!


2009ஆம் ஆண்டு எப்படி? கருத்துக்கணிப்பு முடிவு.. படு மோசம் 37.6% பரவாயில்லை 36.3% மிக சிறப்பு 9.8% மோசம் 9.75% நல்லது 8.3%

இப்படியெல்லாம் இருக்காமல் அடுத்த வருடமாவது இனிதாய் இருக்கட்டும். இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!


பங்குச்சந்தையின் காளையும் கரடியும் போல் முட்டிக்கொள்ளாமல், சமாதானத்துடன் ஆரம்பிப்போம் 2010இனை!
இந்தமுறை புதுவருட 2010க் குறிப்பின் படி,அனைத்துப் பதிவர்களுக்கும் புதுவருடம் (HNY-HAPPY NEW YEAR) 100 சதவீதம் (100.00 புள்ளி) உயர்வை வழங்கவேண்டும் என வாழ்த்துகிறேன்

இன்றைய புதுவருடத்தின் மதிப்பு 2010.00 ஆகும்







வாழ்த்து எனப்படுவது யாதெனில்…

சிறிது பொறுங்கள். அதற்குமுன் வாழ்த்திவிடுகிறேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

இனித்தொடரலாம்..

(இதுக்குமேல நான் எஸ்கேப்..)


கும்மிருட்டில கள்ளன் வாறதுமாதிரி வாற புதுவருசத்துக்கு வாழ்த்தணுமான்னு கேக்கிறான் ஒரு மாங்கா மடையன். வருசமெண்டா இரவிலதான்டா வரும். குதிரை எண்டா விழுத்தத்தான்டா செய்யும் (நெடுந்தீவில இல்லை)

என் அன்புக்குரிய பதிவுலக பாச நெஞ்சங்கள் யாவருக்கும் என் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்... :)


மலர்ந்துள்ள ஆண்டில் சாந்தியும் சமாதானமும் நிலவி, மனிதர்கள் ஒற்றுமையாகவும், மனிதத்துவத்துடனும் வாழ எல்லாம்வல்ல ஆண்டவனைப் பிராத்திக்கிறேன்.


டிவிட்டர் புகழ் கனககோபியின் டிவிட்டர் வாழ்த்து



படம் பதிவுக்காக உருவாக்கப்பட்டது




இரண்டு ரூபாய் SMS போதும்
வாழ்த்து ஒன்றை அனுப்பி முடிக்க
இவர்கள் அனுப்பும் பல SMSகளில்
முடிந்துபோகும் பல சில்லறைகள்…
பை நிறையப் பணமும்…  போன் நிறைய றீலோட்டும்
கொண்ட உனக்கென்ன பயம்?
தட்டிவிடு ஒரு SMSஐ!
பதிலுக்காய் உனக்கு ஒற்றை
மிஸ்டுகோல்தான் முடியும் என்னால்
அதற்கும் ஃபோனில் பேலன்ஸ் வேண்டும்.
வாழ்த்திவிடுகிறேன் இங்கேயே
இனிதாய் இருக்கட்டும்
இரண்டாயிரத்துப்பத்து!



Anaivatukum iniya angila puthandu valthukal. 2010il naan meendum pathivelutha thodankividiven.
(இவர் என்ன சொல்ல வாறாருன்னா அனைவருக்கும் இனிய ஆங்கிலப்புத்தாண்டு வாழ்த்துகள். 2010இல் நான் மீண்டும் பதிவெழுதத் தொடங்கிவிடுவேன்)


புதிதாய்க் கிடைத்த நண்பர்களோடும், எனது புதிய தொலைபேசி இலக்கத்தோடும் பதிதாய்ப் பிறந்த ஆண்டை வரவேற்கிறேன். அனைவருக்கும் எனது இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்


Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy