Monday, July 26, 2010

போல..!


 

3152260172_4298af3157

தேர்தல்

விதை விதைத்த‍வன் தெரியாமல்

வேர் நீர் நனைத்த‍வன் அறியாமல்

கல் எறிபவனுக்கெல்லாம் - தன்

காய் கொடுத்துக்கொண்டிருக்கிறது

மரம் - மக்கள்

வழங்கும் வாக்குப் போல..!

 

பெரிசு

 எரிந்து முடித்த‍வனின் அஸ்தி கரைத்து,

தாகத்து விலங்கின் நா தழுவி,

ஆடை கழுவும் அழுக்கையும் இழுத்துக்கொண்டு,

வழிப்போக்க‍ன் கால்கழுவி, ஊர் வழி உப்பெடுத்து,

ஓடைக்குள் ஓர்நாள் ஒதுங்கிநின்று வந்தாலும்

பானைக்குள் போன மறுநாள்தான் - பழசு

ஆக்க‍ப்ப‍டுகிறது தண்ணீர்

பெரிசு ஆக்க‍ப்ப‍டும் தாய்போல…‌!

 

மாற்ற‍ம்

ஆதி அடி மரத்தின் அருமை அறியாது

வெட்டி ஒட்டிவிட்ட‍ வெள்ளைப் பூவையே

பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்

சிவப்புச் செவ்வ‍ரத்தை..!

.

‘போல’ என்று போடும் உவமைக்கு

கடிவாளம் இடுகிறது - என்

கனத்த மனது…!!

26 comments:

கன்கொன் || Kangon on July 26, 2010 at 6:35 PM said...

// மாற்ற‍ம்

ஆதி அடி மரத்தின் அருமை அறியாது

வெட்டி ஒட்டிவிட்ட‍ வெள்ளைப் பூவையே

பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்

சிவப்புச் செவ்வ‍ரத்தை..! //

அருமை....
மிகவும் பிடித்திருக்கிறது.

மீண்டும் உங்களிடமிருந்து அருமையான கவிதைகள் சுபா அண்ணா...
வாழ்த்துக்கள்....

anuthinan on July 26, 2010 at 6:39 PM said...

அருமை கவிதைகளை ரசித்தேன்!!!

கவி அவதாரம் எடுத்தமைக்கு காரணம் என்னவோ????

Bavan on July 26, 2010 at 6:47 PM said...

:-)))

Ramesh on July 26, 2010 at 7:02 PM said...

அருமை. அருமை. தொடர்கவே......
பூ சிரிக்குது
வேர்களைத்தேடாமல்........
பிடித்திருக்கு

அன்புடன் நான் on July 26, 2010 at 7:35 PM said...

தேர்தல் கவிதை மிக அருமை... பாராட்டுக்கள்.

vasu balaji on July 26, 2010 at 8:55 PM said...

இரண்டும், மூன்றும் ஒன்றும் என் தேர்வு சுபாங்கன். அருமை.

maruthamooran on July 26, 2010 at 9:29 PM said...

தேர்தல் கவிதை அருமை.

ஈரோடு கதிர் on July 26, 2010 at 9:48 PM said...

தேர்தல் - பெரிசு

மிக மிக அருமை

balavasakan on July 26, 2010 at 10:12 PM said...

மனதை நெருடும் நிஜங்களை பேசுகின்றன கவிதைகள்

ARV Loshan on July 26, 2010 at 10:12 PM said...

too Good..
wow


மூன்றையும் ரசித்தேன்.
அடிக்கடி எழுதவும்.

தர்ஷன் on July 26, 2010 at 10:34 PM said...

அருமை சுபாங்கன்
குறிப்பாக ஒரு கவிதையை சொல்லலாமென மீள் மீள வாசித்தும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மூன்றுமே அருமை

யோ வொய்ஸ் (யோகா) on July 26, 2010 at 11:34 PM said...

தரங்கம் கவிதைகளின் அரங்கமாகி வருகிறது..

சந்தோஷம்

Unknown on July 26, 2010 at 11:50 PM said...

அழகான வரிகள் அருமை..

Kaviyarangan on July 27, 2010 at 5:27 AM said...

முன் பின் அறிமுகமில்லாமல் பின்னூட்டமிடுகிறேன் - காரணம் எனக்கு இவை மிக தரமான கவிதைகள் - நன்றிகள்.

ஆதிரை on July 27, 2010 at 9:52 AM said...

அனைத்தும் அருமை...

வேர்களை அறியாத பூக்கள்
பிடித்திருக்கு.

இன்னும் வரட்டும்....

Jana on July 27, 2010 at 11:15 AM said...

//‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!//

இங்கும் அதே....

Subankan on July 27, 2010 at 6:00 PM said...

//கன்கொன் || Kangon said...
மீண்டும் உங்களிடமிருந்து அருமையான கவிதைகள் சுபா அண்ணா...
வாழ்த்துக்கள்....
//

நன்றி கன்கொன்

// Anuthinan S said...
அருமை கவிதைகளை ரசித்தேன்!!!

கவி அவதாரம் எடுத்தமைக்கு காரணம் என்னவோ???//

நன்றி அனு, சொல்லிக்கொள்ளும்படியாக ஒரு காரணமும் இல்லை

//Bavan said...
:-)))//

:)))

// றமேஸ்-Ramesh said...
அருமை. அருமை. தொடர்கவே......
பூ சிரிக்குது
வேர்களைத்தேடாமல்........
பிடித்திருக்கு
//

:), நன்றி

Subankan on July 27, 2010 at 6:04 PM said...

// சி. கருணாகரசு said...
தேர்தல் கவிதை மிக அருமை... பாராட்டுக்கள்//

நன்றி :)

// வானம்பாடிகள் said...
இரண்டும், மூன்றும் ஒன்றும் என் தேர்வு சுபாங்கன். அருமை.
//

நன்றி ஐயா

//மருதமூரான். said...
தேர்தல் கவிதை அருமை.//

நன்றி

//ஈரோடு கதிர் said...
தேர்தல் - பெரிசு

மிக மிக அருமை
//

மிக்க நன்றி

Subankan on July 27, 2010 at 6:06 PM said...

// Balavasakan said...
மனதை நெருடும் நிஜங்களை பேசுகின்றன கவிதைகள்//

:)), நன்றி

// LOSHAN said...
too Good..
wow


மூன்றையும் ரசித்தேன்.
அடிக்கடி எழுதவும்.
//

நன்றி அண்ணா, உங்கள் கவிதைக்காக வெயிட்டிங் ;)

// தர்ஷன் said...
அருமை சுபாங்கன்
குறிப்பாக ஒரு கவிதையை சொல்லலாமென மீள் மீள வாசித்தும் தேர்ந்தெடுக்க முடியவில்லை. மூன்றுமே அருமை
//

நன்றி தர்ஷன்

Subankan on July 27, 2010 at 6:08 PM said...

//யோ வொய்ஸ் (யோகா) said...
தரங்கம் கவிதைகளின் அரங்கமாகி வருகிறது..

சந்தோஷம்
//

எனக்கும் சந்தோஷம் :)

// சிநேகிதி said...
அழகான வரிகள் அருமை..
//

நன்றி சினேகிதி

// ஆதிரை said...
அனைத்தும் அருமை...

வேர்களை அறியாத பூக்கள்
பிடித்திருக்கு.

இன்னும் வரட்டும்....
//

நன்றி அண்ணா

// Jana said...
//‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!//

இங்கும் அதே..//

சேம் பிளட்? :)

ஹேமா on July 27, 2010 at 8:54 PM said...

மூன்றுமே சிந்தனை அருமை சுபா.தேர்தலும் பெரிசும் முதல் தரமாய் இருக்கு.பாராட்டுக்கள்.

//‘போல’ என்று போடும் உவமைக்கு
கடிவாளம் இடுகிறது - என்
கனத்த மனது…!!//

உண்மைதான்.

Ashwin-WIN on July 30, 2010 at 10:08 AM said...

பலாப்பழங்களை விட இந்த ஈச்சம்பழம் மிகவே பிடித்துப்போய் விட்டது..
இன்றிலிருந்து ரசிகனாகிவிட்டேன் உங்கள் படைப்புகளுக்கு... அருமை..

பால்குடி on August 4, 2010 at 9:27 PM said...

அருமையான கவிதைகள். ரசித்தேன். தரங்கம் இனி மேல் கவியரங்கமாகுமோ???

ம.தி.சுதா on August 7, 2010 at 11:51 PM said...

//வெட்டி ஒட்டிவிட்ட‍ வெள்ளைப் பூவையே

பூத்துக்கொண்டிருக்கிறது – அந்தச்

சிவப்புச் செவ்வ‍ரத்தை..!//
ஆகா.. என்ன அருமையான வரியிது. எம் தமிழருக்காய் எழுதியது போல உள்ளது சுபாங்கன். வளர்ந்து வரும் ஒரு வலைப்பதிவனின் மனதில் பட்ட எண்ணம் இது. நேரம் கிடைத்தால் என் ஓடையிலும் ஒரு முறை நனைந்து பாருங்க.
mathisutha.blogspot.com

சிங்கக்குட்டி on August 15, 2010 at 12:11 PM said...

ரொம்ப ரொம்ப நல்லா இருக்கு :-)

மன்னார் அமுதன் on December 7, 2010 at 1:29 PM said...

உங்கள் கவிதைகள் மிக அருமை.. இரத்தினச் சுருக்கமாக, அழகாக கருத்தை வெளிப்படுத்துகிறது... வாழ்த்துக்கள்...

கொலைக் காற்றும் வாசித்தேன்... அருமை... தொடருக்காக் காத்திருக்கிறேன்..

Related Posts with Thumbnails
 

தரங்கம். Copyright 2009 All Rights Reserved | Privacy Policy